அட்டுலுகம, மாராவ பகுதியைச் சேர்ந்த, தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பேருக்கு இன்று வீடு திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 26ம் திகதி குறித்த பகுதியில் கொரோனா தொற்றுள்ள ஒரு நபர் கண்டறியப்பட்டதன் பின்னணியில் குறித்த நபர்களை சர்வோதய கட்டிடம் ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும் தற்போது அவர்களுக்கு வீடு திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் உதய ரத்னாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 28ம் திகதி முதல் தனிமைப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது வீடு திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment