கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டங்களுக்கிடையிலான பிரயாணம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment