டுபாயிலிருந்து நாடு திரும்பி, 16 நாட்களாக தனிமைப்படாது ஒளித்துத் திரிந்த பல்லேகம (தெனியாய) பகுதியைச் சேர்ந்த நபரை சுகாதார அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபருக்கு ஒரு லட்ச ரூபா சரீரப் பிணை வழங்கியுள்ள நீதிமன்றம் 11 நாட்கள் வீட்டிலேய சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த விஜேசிங்ககே ரஞ்சித் என அறியப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் இருந்து வந்தோரை பதியுமாறு அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment