இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர் குடியிருந்த நீர்கொழும்பு போருதொட்ட பகுதியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் அடிப்படை பற்றிய பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ள முன்பதாகவே அவசர அவசரமாக நள்ளிரவில் அவரது உடலம் தகனம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது குடும்பத்தவர்கள் ஏலவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை கொரோனா பரவல் தடுப்பின் பின்னணியில் போருதொட்ட பிரதேசத்தையும் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment