புத்தளம் சாஹிரா கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் 100 முதல் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்குள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் நபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளானதையடுத்து பிரதேசத்தில் உள்ளவர்களுக்கான கண்காணிப்பு மையமாக புத்தளம் சாஹிரா கல்லூரி மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் கூட்டிணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் 150 பேர் வரை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment