மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 102! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 102!


இன்றைய தினம் இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.


கண்காணிப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினர் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலவே கண்காணிப்பில் இருந்த சிலர் கடந்த தினங்களாக தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

தற்சமயம் இலங்கையில் 102 பேர் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இருவர் சுகமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment