சஜித் பிரேமதாச தலைமையில் அமையப் பெற்றுள்ள புதிய கூட்டணி தனித்துப் போட்டியிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லையென்றால் அதற்கான ஒரே தீர்வு கூட்டணியை யானைச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாகும் என ரணிலுக்கு விளக்கமளித்துள்ளது புதிய கூட்டணி.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தனது தந்தையும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட பாரம்பரியம் தமக்கிருப்பதாகவும் யானைச் சின்னத்தை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை அனுமததித்தால் புதிய கூட்டணி யானைச் சின்னத்திலேயே போட்டியிடலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment