நாட்டில் 40,000 போலி மருத்துவர்கள் இயங்கி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
அதில் 10,000 பேர் அடையாளங் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் GMOA , போலி மருத்துவர்களை முடக்குவதற்கான சட்ட திட்டங்களை வலுப்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
40,000 போலி மருத்துவர்கள் நாடெங்கிலும் 'சிகிச்சை' நிலையங்களை நடாத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment