இனவாதிகளுடன் கை கோர்ப்பதே அபாயகரமானது: அநுர - sonakar.com

Post Top Ad

Tuesday 5 November 2019

இனவாதிகளுடன் கை கோர்ப்பதே அபாயகரமானது: அநுர


இனவாத - அடிப்படைவாதிகளுடன் கை கோர்த்து அவர்களுடன் தோள் சேர்ந்து பணியாற்றுவதே தேசிய பாதுகாப்புக்குச அச்சுறுத்தலானது என தெரிவிக்கிறார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.



இலங்கையில் இனவாத சர்ச்சைகளை உருவாக்கி வரும் முக்கிய நபர்கள் அனைவருமே கோட்டாபே ராஜபக்சவின் முகாமில் இணைந்துள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அநுர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதாயின் முதலில் சமூகங்களிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment