வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டாபே! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 October 2019

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டாபே!


இம்மாதம் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளார் கோட்டாபே ராஜபக்ச.



தமது கட்சிக்காரர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதோடு அவரது கடவுச்சீட்டும் சட்டபூர்வமானது என்பதை நிரூபிக்க இது அவசியப்படுவதாக கோட்டாபேயின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தேவையான மருத்துவ சான்றிதழ்களை பரிசீலிக்கும் நிமித்தம் நாளை மறுதினம் வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment