சின்னத்தை மாற்றக் கேட்டால் மட்டும் முடியாதா? மைத்ரி விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday 30 September 2019

சின்னத்தை மாற்றக் கேட்டால் மட்டும் முடியாதா? மைத்ரி விசனம்!


மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி, அவர் தலைமையில் அரசொன்றை அமைப்பதற்குத் தான் கடந்த வருடம் ஒக்டோபரில் வழி செய்து கொடுத்தும் 113 பேரின் ஆதரவைப் பெற முடியாமல் போனது தனது தவறில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



அதனையும் மீறி, இனறும் மஹிந்த உட்பட பலர் நாடாளுமன்றில் இருப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையிலேயே எனவும் அதனூடாகவே மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடிகிறதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தனை நலலது செய்தும், கோட்டாபே ராஜபக்சவை வெல்ல வைப்பதற்கான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகள் செய்தும் இரு கட்சிகளும் இணைவதற்கு 'மொட்டு' சின்னத்தைக் கைவிட்டு பொதுச் சின்னத்துக்குள் வரும்படி கேட்டால் மாத்திரம் அதனைத் தவறாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார் எனவும் மைத்ரி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment