கோட்டாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 13 August 2019

கோட்டாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: கம்மன்பில



மஹிந்த ராஜபக்ச அறிமுகப்படுத்தியது வேட்பாளரையன்றி இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை என தெரிவிக்கின்ற உதய கம்மன்பில, கோட்டாபேயின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவிக்கிறார்.



நடைமுறை அரசின் பொய் வாக்குறுதிகளையும் போலிப் பிரச்சாரங்களையும் நம்பி ஒரு முறை அந்த வலையில் வீழ்ந்த மக்கள் மீண்டும் விழப்போவதில்லையென தெரிவிக்கின்ற கம்மன்பில, அரசுக்கெதிரான மக்கள் எழுச்சி நிரூபிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாக தகவவ்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment