மைத்ரி முடிவெடுத்ததும் எனது முடிவு: வெல்கம! - sonakar.com

Post Top Ad

Tuesday 13 August 2019

மைத்ரி முடிவெடுத்ததும் எனது முடிவு: வெல்கம!


கோட்டாபே ராஜபக்ச பெரமுன வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த மஹிந்த அணி பிரமுகர் குமார வெல்கம, தமது கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் முடிவை அறிவித்ததும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக தெரிவிக்கிறார்.



தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரே என தெரிவித்து வரும் அவர், பெரமுனவில் மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் தான் தலைவராக ஏற்கப் போவதில்லையென தெரிவித்து வருகிறார்.

தற்போது கோட்டாபே பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் மைத்ரியின் முடிவுக்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment