போலி வேட்பாளர்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Monday 29 July 2019

போலி வேட்பாளர்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தேசப்பிரிய


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களை குழப்பி, வாக்குகளைச் சிதைக்கும் வகையில் போலி வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய.



கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் உருவத்துக்கு ஒப்பான ஒருவரை மஹிந்த ராஜபக்ச தேர்தல் தினத்தன்று தன்னோடு அழைத்துச் சென்று பரபரப்பை உருவாக்க முனைந்திருந்தார்.

இந்நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு தலைவர் இவ்வாறான முன் கூட்டிய அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment