வென்னப்புவ பி.சபை தலைவருக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

வென்னப்புவ பி.சபை தலைவருக்கு நீதிமன்ற அழைப்பாணை


வென்னப்புவ பிரதேச சபைக்குட்பட்ட தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களை அனுமதிக்கப் போவதில்லையென அறிக்கை வெளியிட்ட வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு மாரவில நீதிமன்றம் அழைப்பாணை  விடுத்துள்ளது.


முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கு வருவது தொடர்பாக பிரதேச வாசிகள் தன்னிடம் முறையிட்டதாகவும் சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு தான் அந்த முடிவை மேற்கொண்டதாகவும் குறித்த நபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இ.து குறித்து விளக்கமளிக்க எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a Comment