ரிசாத் பதியுதீனிடம் நாளை விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

ரிசாத் பதியுதீனிடம் நாளை விசாரணை



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் விசாரணைகளை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை 26ம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இதேவேளை நாளைய தினம் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் தெரிவுக்குழு முன் ஆஜராகி விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக அறியமுடிகிறது.

தொடர்ச்சியாக பலரை விசாரணை செய்துள்ளதன் பின்னணியில் அரச உயர் மட்டம் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளமை புலப்பட்டுள்ள நிலையில் நாளைய விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment