தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் மத்திய மாகாண நிதிப் பொறுப்பாளர் என சந்தேகிக்கப்படும் ஒரு நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரே அமைப்பின் நிதி விவகாரங்களைக் கையாண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சந்தேகநபர் இராணுவ சீருடை போன்ற உடையில் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக அமைப்பு சார்பில் இடம்பெற்ற பல்வேறு பணப்பரிமாற்றங்கள் தொடர்பிலும், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கி வந்தவர்களின் விபரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment