7500 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைவு - sonakar.com

Post Top Ad

Sunday 5 May 2019

7500 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைவு


நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், இராணுவத்திலிருந்து முறையாக விலகாது வெளியேறியிருந்தோருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன்படுத்தி 7500 பேர் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை இராணுவம்.



இதேவேளை, தொடர்ந்தும் இராணுவத்தை விட்டு விலக விரும்புவோருக்கும் அதற்கான சட்டபூர்வ உதவிகளை வழங்க இராணுவம் தயாராகவே இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து பெரும்பாலும் நாட்டின் அனைத்து பாகங்களிலும் முஸ்லிம் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment