
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகவிருந்த ரயில்வே வேலை நிறுத்தம் அமைச்சருடனான பேச்சுவார்த்தையையடுத்து தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு கிடைக்காமையின் பின்னணியில் நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக முன்னதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளின் பயனாக தற்போது வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment