பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் விஜேதாச ராஜபக்ச.
ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து உளவுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அதனடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதன் பின்னணியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாதுகாப்பு படைகளின் முக்கிய பொறுப்புகளில் மாற்றங்கள் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகக்குறைந்தது ஒரு வார காலத்திற்கு முன்பதாகவே பொலிஸ் மா அதிபருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள அதேவேளை, ஆங்காங்கு சம்பவங்கள் இடம்பெறக்கூடும் எனும் தகவலே கிடைக்கப் பெற்றதாகவும் இத்தனை பாரிய தாக்குதல் எதிர்பார்க்கப்படவில்லையெனவும் பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment