கட்டுநாயக்க விமான நிலையம் அருகே விமானப்படையினரால் சக்திவாய்ந்த குண்டொன்று மீட்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஞாயிறு தினம் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விமான நிலையம் அருகே இவ்வாறு குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்றுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment