ஹொரவபொத்தான பகுதியில் புதையில் தோண்டிய ஆறு பேரை ஸ்தலத்தில் வைத்தே கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கபுகல்லேவ பிரதேசத்தில் நேற்றிரவு 11 மணியளவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்நறுவ, தம்புள்ள உட்பட பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment