ஹரின் பெர்னான்டோவின் தந்தையிடம் புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்ததாக ஹரின் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாறு அமைச்சரின் தந்தைக்குத் தெரிந்தது ஜனாதிபதி மைத்ரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் மட்டும் தெரியாமல் போனது எப்படி என கேள்வியெழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ச.
சம்பவம் குறித்த தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment