ஓகஸ்டில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இல்லை: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Saturday 6 April 2019

ஓகஸ்டில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இல்லை: தேசப்பிரிய


எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லையென சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.



தேர்தலை பழைய முறைமையில் நடாத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் நாடாளுமன்றில் இன்னும் கொண்டுவரப்படாத நிலையில் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தேர்தல் முறைமை மாற்றத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஏற்படுத்த விரும்பியதாகவும், அதனை சரி செய்யும் பொறுப்பும் அக்கட்சி சார்ந்தது எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment