ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்து பயணித்தாலன்றி பொதுஜன பெரமுனவால் தனித்து நின்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதுடன் கோட்டாபே முற்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், இரு தரப்பும் இணைந்து பொதுவாக ஒருவரை களமிறக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்படாவிடின் அது தோல்வியையே தரும் என அமரவீர விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment