ஐக்கிய தேசிய முன்னி அரசுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, லக்ஷ்மன் செனவிரத்ன, விஜேமுனி சொய்சா, பியசேன கமமே மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சரத் பொன்சேகா, பாலித ரங்கே பண்டார ஆகியோரை இராஜாங்க அமைச்சர்களாக நியமிப்பதற்கான வேண்டுகோளை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
தமது கட்சியிலிருந்து ஐ.தே.கட்சியை ஆதரிப்பவர்களுக்கு பதவி தர முடியாது என இதுவரை தெரிவித்து வந்த மைத்ரி, இவ்விடயம் தொடர்பில் இன்னும் முடிவொன்றை எட்டவில்லையென தகவல் அறியமுடிகிறது.
தேசிய அரசமைத்து மேலும் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிலிறங்கியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது இராஜாங்க அமைச்சர் பதவிகளை கோரியுள்ளமையம் சரத் பொன்சேகாவுக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு பதவி பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment