119 அவசர சேவை பொறுப்பதிகாரி மீது உயரதிகாரியொருவர் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னணியில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதம இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ ஜயதிலக மீதே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிஸ் தகவல் திணைக்கள பிரிவின் பணிப்பாளரே தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட குரோதம் ஒன்றின் பின்னணியிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment