UK: கத்திக் குத்துக்கு இலக்காகி இலங்கை நபர் மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday 26 March 2019

UK: கத்திக் குத்துக்கு இலக்காகி இலங்கை நபர் மரணம்


ஐக்கிய இராச்சியம், பின்னர் (லண்டன்) பகுதியில் சிறு வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த ரவி கதிர்காமர் என அறியப்படும் 54 வயது நபர் அவரது கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றையடுத்து கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


கடந்த ஞாயிறு காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்களை பொலிசார் இன்று வெளியிட்டுள்ளனர்.

கடைக்குள் புகுந்து கொள்ளையிட்ட நபரே இக்கொலைத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் ஹரோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment