ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தில் தேடப்படும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரும் மஹிந்தவின் உறவினருமான உதயங்க வீரதுங்கவை துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சி பற்றி மீண்டும் அரசு பேச ஆரம்பித்துள்ளது.
இப்பின்னணியில் குறித்த நடவடிக்கை நிமித்தம் டுபாயில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் அர்ஜுன மகேந்திரனும் சிங்கப்பூரில் 'இருக்கும் இடம்' தெரியாது என தற்போதைய அரசு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment