கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாவதைத் தான் மக்கள் விரும்புவதாக தெரிவிக்கிறார் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.
தீவிர மஹிந்த ஆதரவாளராகத் தம்மைக் காட்டிக் கொண்டதன் மூலம் மஹிந்த அணி ஆதரவில் தமது கட்சிக்கான நாடாளுமன்ற, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அதிகரித்துக் கொண்டுள்ள விமல் வீரவன்ச, தற்போது கோட்டபே ஜனாதிபதியாக வேண்டும் என தெரிவித்து வருகிறார்.
இதேவேளை, மைத்ரி - மஹிந்த இடையில் கடந்த ஒக்டோபரில் மலர்ந்த நட்புறவின் பின்னணி பற்றிய சந்தேகம் நிலவுகின்றமையும் மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment