உக்குவளை: முச்சக்கர வண்டியில் மோதிய கார்; பெண் பலி! - sonakar.com

Post Top Ad

Monday 25 March 2019

உக்குவளை: முச்சக்கர வண்டியில் மோதிய கார்; பெண் பலி!


மாத்தளை, உக்குவளை பகுதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியொன்றின் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



அக்குறணை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செலுத்தி வந்த வாகனவே இவ்வாறு மோதியிருந்த நிலையில் உக்குவளை சந்தியில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுனரின் மனைவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் பிரதேசத்தில் சிறு பதற்றம் உருவாகியிருந்த போதிலும் பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறியமுடிகிறது.



-Fulail C.

No comments:

Post a Comment