வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தோஹாவிலிருந்து இலங்கை வந்த விமானத்திலேயே குறித்த நபர் வந்துள்ள அதேவேளை இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
423 தங்க வளையல்கள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment