STF முகாமுக்குள் பொலிஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Monday 7 January 2019

STF முகாமுக்குள் பொலிஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை!


புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் தர பொலிஸ் அதிகாரியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இரு குழந்தைகளின் தந்தையான 49 வயது நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் அரசியல் கூட்டம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுத் திரும்பியவரே இவ்வாறு முகாமுக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment