450 கோடியில் புதிய லக்கல நகரம்: மைத்ரி - சஜித் வைபவத்தில் இணைவு! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 January 2019

450 கோடியில் புதிய லக்கல நகரம்: மைத்ரி - சஜித் வைபவத்தில் இணைவு!



களுகங்கை நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்ட புதிய லக்கல நகரம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.


ஒக்டோபர் அரசியல் சர்ச்சையின் பின் ஜனாதிபதி மைத்ரி - சஜித் பிரேமதாச, அர்ஜுன ரணதுங்க, தயா கமகே உட்பட முக்கியஸ்தர்கள் ஒரே நிகழ்வில் இன்று காட்சியளித்திருந்தனர்.

நவீன வசதிகளுடன் கூடிய புதிய லக்கல நகர அமைப்புக்கு 4,500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment