முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு: 22 வயது நபர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday 7 January 2019

முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு: 22 வயது நபர் பலி!


முல்லேரியா, அங்கொட சந்தியருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 22 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வும் வழமை போன்று மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் நிகழ்த்தப்பட்டுடுள்ளதாகவும் துப்பாக்கிதாரிகள் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ள அதேவேளை கூட்டாட்சியின் கடந்த மூன்றரை வருடங்களில் பாதாள உலக நடவடிக்கைகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment