முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் தவறிழைக்கக் கூடாது: நாமல்! - sonakar.com

Post Top Ad

Monday 7 January 2019

முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் தவறிழைக்கக் கூடாது: நாமல்!


முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டது போல அரசியலமைப்பிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.


நாவலப்பிட்டி  நகரில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது அவசர அவசரமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரப்பட சுமந்திரன் குழு முயற்சித்து வருகிறது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாற்சி நாடாகவே இலங்கை இருக்கும் என பிரதமர் தரப்பு சிங்கள மொழியில் கூறி வந்தாலும் அதற்கு மாற்றமான ஒரு கருத்தினை சுமந்திரன் கூறிவருகிறார்.

அவசரமாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெரும்பான்மை மக்களின் பூரண விருப்பத்துடனேயே சிறுபான்மை மக்களுக்கு அதைகாரம் பங்கீடு செய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் அதிகார பகிர்வை செய்தால் அது ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாது.

தமிழ் கூட்டமைப்பு அரசியலமைப்பை எவ்வாறாவது நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற விடாப்பிடியாக உள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சி தலைவர்கள் மிகவும் கரிசனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாகாண சபை திருத்த சட்டத்தில் விட்ட தவறை   அரசியலமைப்பில் விடக்கூடாது என குறிப்பிட்டார்.

-JO

No comments:

Post a Comment