தற்போது நிலவும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெளிவுபடுத்தியுள்ளார் சஜித் பிரேமதாச.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லையென மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் சஜித்தே மாற்றீடெனும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. எனினும், தற்சமயம் கட்சித் தலைமையைத் தனிமைப்படுத்த முடியாது எனவும் அவரோடு தோள்நிற்பது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளி கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் சஜித் இதிலிருந்து தூர விலகிக் கொண்டுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் தான் கட்சியின் பிரதமர் வேட்பாளராவது உறுதியெனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment