மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிக்க முடியாது என அறிவிக்கக் கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்றுள்ள நிலையில் 3 மணியளவில் வழக்கின் எதிர்காலம் பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் முதல் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை இடம்பெறுவதுடன் 7ம் திகதி அது தொடர்பிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் அப்பதவியில் தொடர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment