மஹிந்த ராஜபக்சவின் மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவரும் அவரது அமைச்சரவையும் குறித்த பதவிகளில் தொழிற்படத் தடையை நீக்க மறுத்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னணியில் நீதிபதிகள் இம்முடிவை அறிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக தொழிற்பட மேன்முறையீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்தே உச்ச நீதிமன்றில் மேற்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment