ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருக்கின்ற போதிலும் அண்மைய கூட்டங்கள் மற்றும் மாநாட்டுக்குத் தான் அழைக்கப்படாமை குறித்து கோபத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
இது தொடர்பில் சு.க செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், தான் புறக்கணிக்கப்படுவது கவலை தருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலசுகட்சியை மீளக் கட்டியழுப்பும் நடவடிக்கைகள் சந்திரிக்கா தலைமையிலேயே இடம்பெறுவதாகவும் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு இணைந்து ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment