மஹிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவையும் இயங்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு இதுவரை தேதி ஒதுக்கப்படவில்லை.
12ம் திகதி வரையே இடைக்காலத் தடையுள்ள நிலையில் இன்னும் இரு தினங்களுக்குள் நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் ஏழு நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உச்ச நீதிமன்றுக்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரமில்லையென இன்று சட்டமா அதிபர் வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment