பங்களதேஷ் பொதுத் தேர்தல் வாக்களிப்பு: இதுவரை ஏழு பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday 30 December 2018

பங்களதேஷ் பொதுத் தேர்தல் வாக்களிப்பு: இதுவரை ஏழு பேர் பலி!


பாரிய வன்முறைகளுக்கு மத்தியில் பங்களதேஷ் பொதுத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.


மூன்றாவது தடவையாகவும் பிரதமராவதற்கான போட்டியில் களமிறங்கியுள்ளார் ஷேக் ஹஸீனா. இந்நிலையில் இது வரை தேர்தல் வன்முறைகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2700 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றிரவு (உள்ளூர் நேரம்) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வதந்திகள் பரவுவதைத் தடுக்க கைத்தொலைபேசிகளுக்கான இணைய இணைப்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment