அரசாங்கம் மற்றும் பிரதமர் இயங்குவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் அரச அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பொ சேவை ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பொது சேவைகள் எவ்வித அசௌகரியமும் இன்றி தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நேற்றைய நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று அமைச்சு செயலாளர்களை அழைத்து விசேட சந்திப்பொன்றை நடாத்திய நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி திடீரென நியமித்த பிரதமரும், அமைச்சரவையும் இயங்குவதற்கு எதிர்வரும் 12ம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரங்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடமே குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment