துருக்கி தலை நகர் அன்காராவில் இன்று காலை இடம்பெற்ற கோர இரயில் விபத்தில் ஒன்பது உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மர்சன்டிஸ் இரயில் நிலையத்தில் அதிவேக இரயில் ஒன்று இன்னொரு இரயிலுடன் மோதித் தடம் புரண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இரயில் சாரதியும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் நேரம் அதிகாலை 06.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment