நல்லாட்சித் திட்டத்தையும், தனது அரசியல் எதிர்காலத்தையும் ரணில் விக்கிரமசிங்க நாசமாக்கி விட்டதாக தெரிவிக்கிறார் மைத்ரபால சிறிசேன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள மைத்ரி, ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடமே அடைக்கலம் இருப்பதாகவும் தாம் மக்களிடமே வருவதாகவும் தெரிவிக்கிறார்.
ஐ.தே.முன்னணி, மஹிந்த மற்றும் பெரமுன உறுப்பினர்களுடனும் நட்புரீதியாக பழகிக்கொண்டிருப்பதாகவும் ரணிலுக்கும் தனக்குமிடையில் தனிப்பட்ட குரோதம் எதுவுமில்லையெனவும் ஆனாலும் ரணிலின் கொள்கைகளும் செயற்பாடும் இந்நாட்டுக்கு ஒத்து வராது எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment