வடபுல வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் மும்முரம் - sonakar.com

Post Top Ad

Saturday 22 December 2018

வடபுல வெள்ள மீட்பு பணியில் இராணுவத்தினர் மும்முரம்


கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு  பகுதியில் பெய்து வரும்   கடும் மழை காரணமாக  பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் இன்று(22) வரை  வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினால்  பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இம்மாவட்டங்களில்   உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால்  வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில்   காணப்பட்ட மக்களை  இராணுவத்தினர்  இறக்கப்பட்டு மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.மேலும் இப்பகுதியில் உள்ள  வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால்  மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.



தொடரும் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்காக  கிளிநொச்சி  இரணைமடுக் குளத்தின்  அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன.இதனால்  தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு   கிளிநொச்சி பிராந்தியம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். 



கிளிநொச்சி பகுதியில்  கடும் மழை காரணமாக வட்டக்கச்சி மாவடியம்மன்  புன்னைநீராவி பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்   கனகராயன் ஆற்று படுக்கை பன்னங்கண்டி முரசுமோட்டை  ஐயன்கோவிலடி  பளையவட்டக்கச்சி பெரியகுளம்  வெளிக்கண்டல்  கண்டாவளை ஊரியான்  பகுதியில்  உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம 25.5 அடி காணப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 1.5 அடி பாய ஆரம்பித்துள்ளது.

எனவே அக்குளத்தை அண்டிய அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர்.


அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  கடும் மழை பெய்து வருகிறது.மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது.கடும் மழை காரணமாக வீதிகளிலும்இ தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment