நாளுக்கொரு அறிக்கை விட்டு நேரத்தை வீணடிக்காமல் அவரே ஆரம்பித்த அரசியல் சர்ச்சைக்கு தீர்வு காண மஹிந்தவுக்கு ஐந்து நிமிடங்கள் போதும் என்கிறார் சம்பிக்க ரணவக்க.
நேற்றைய தினம் பொதுத் தேர்தலை நடாத்தக் கோரி மஹிந்த ராஜபக்ச நீண்ட உரையாற்றியிருந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ள சம்பிக்க, மஹிந்த இராஜினாமா செய்வதாக அறிவித்தல் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடும் எனவும் அதைச் செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூடத் தேவையில்லையெனவும் தெரிவித்துளளார்.
எனினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் மஹிந்த பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment