ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை கொண்டுள்ள வரை தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் நேற்று மாலை சந்தித்திருந்த நிலையில் ஒருமுகமாக இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணி அரசை ஆதரிப்பதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ள அதேவேளை, ரணிலுக்கோ பொன்சேகாவுக்கோ பிரதமர் பதவியை தரப்போவதில்லையென மைத்ரி தெரிவித்துள்ளமையும் பிரதமரை தெரிவு செய்வது நாடாளுமன்றமே என ரணில் பதிலளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment