பதவிக்காலம் முடிந்த பின்னும் மைத்ரியை விடப் போவதில்லை: தம்பர அமில தேரர்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

பதவிக்காலம் முடிந்த பின்னும் மைத்ரியை விடப் போவதில்லை: தம்பர அமில தேரர்!


மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக் காலத்தை நிறைவு செய்ததன் பின்னரும் அவரை விடப் போவதில்லையென தெரிவிக்கிறார் தம்பர அமில தேரர்.



அரசியல் சட்டத்தை மீறி நாட்டை குழப்ப நிலைக்குள் தள்ளிய மைத்ரியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்தே ஆக வேண்டும் என தெரிவிக்கின்ற அமில தேரர், ஏலவே மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், மைத்ரிபால தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாலும் அவரை விடப் போவதில்லையென தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment