கரு ஜயசூரியவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday 5 November 2018

கரு ஜயசூரியவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை முன்னைய அரசினையே தான் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



நாடாளுமன்ற கூடுவதற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ள நிலையில், புதிய அரசு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் அதுவரை தன்னால் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கரு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் பக்க சார்பாக கருத்து வெளியிடுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment